Posts

கிராமாலயா - தூய்மை தமிழ்நாடு திட்டம்

Image
கிராமாலயா -  தூய்மைத் தமிழ்நாடு திட்டம் அறிமுகம்: சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம், நலவாழ்வு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை எவ்வித பாலின பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே கிராமாலயாவின் தொலைநோக்குப் பார்வை ஆகும். நவீன (ஸ்மார்ட்) தனிநபர் கழிப்பறை நவீன (SMART) கழிப்பறை என்றால் *Safe and Sustainable –சுகாதாரமான மற்றும் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக்கூடியது. *Maintanable - எளிதில் பராமரிக்கக்கூடியது *Affordable - எல்லோரும் கட்டிப் பயன்படுத்தக்கூடியது. *Recyclable- கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாகப்பயன்படுகிறது *Technically Perfect- சரியான தொழில் நுட்ப வசதியுடன் கூடியது நவீன கழிப்பறையின் முக்கிய அம்சங்களாவன: *குளியலறையுடன் கூடிய கழிப்பறையை குடும்ப உறுப்பினர்கள் எல்லா சுகாதார செயல்பாடுகளுக்கும் குறிப்பாக தன் சுத்தம் பேணுவதற்கும், பயன்படுத்துவதற்கும் எளிது. *கழிப்பறையாகப் பயன்படுத்தலாம். சோப்புடன் கூடிய கை கழுவும் வசதிகள் இருக்கும். *கழிப்பறைக்குள் சுகாதாரம் சம்மந்தப்பட்ட பற்பசை, பிரஷ், சோப், ஷாம்பு போன்ற எல்லா பொருட்களும் இரு...

கைது, கையடைவு மற்றும் காவல் வைப்புக் கட்டளை;

Image
கைது, கையடைவு மற்றும்  காவல் வைப்புக் கட்டளை; *தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற* *சங்கம், வழக்கறிஞர் பிரிவு...*🔥 கைது (Arrest); கைது என்றால் காவல் துறை அதிகாரி அல்லது சட்டத்தால் அதிகாரம் பெற்ற ஒருவர் மற்றொருவரைத் தன்னுடைய கட்டுபாட்டில் கொண்டு வருவது. காவல் வைப்புக் கட்டளை (remand); ஒருவர் கைது செய்யப்பட்டபின் நீதிமன்றத்தில் அவரை ஒப்படைத்த பின்பு தான் remand என்ற பதம் சட்டத்தில் பயன்படுத்தபடுகிறது. Remand என்றால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றம் நீதிமன்ற காவலில் எடுத்துக்கொள்வது. காவல்துறை அதிகாரிகளுக்கு ஒருவரை Remand  செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. கையடைவு (custody); *தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலே கையடைவாகும்.  *கைது Arrest என்பதற்கும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது custody என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. *Custody ல் கைது உள்ளது Arrest ல் custody இல்லை. அதாவது எல்லா Arrest ம் custody குள் வரும் எல்லா custody யும் Arrest க்குள் வராது. *ஒருவரை காவல்துறை கைது செய்தவுடன், இரண்டு வகையில் கைது செய்யப்பட்ட நபரை காவலில் வைக்கலாம். நீத...

உபா சட்டம் என்றால் என்ன..??

Image
உபா சட்டம் என்றால் என்ன? அதன் முக்கியப் பிரிவுகள் என்னென்ன? *தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற* *சங்கம், வழக்கறிஞர் பிரிவு...*🔥 உபா என்று அழைக்கப்படும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் என்றால் என்ன? அதில் உள்ள முக்கியப் பிரிவுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், அமைப்பாகும் சுதந்திரம், ஒன்று கூடுதல் என்ற அடிப்படை உரிமைகளை இந்திய குடிமக்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால், இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், அரசியல் சாசனம் வழங்கிய இந்த உரிமைகளை வரையறைக்குள் கொண்டு வர இந்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில், 1967-ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உபா என்று அழைக்கப்படும் இந்தச் சட்டத்தில் `எது தீவிரவாத நடவடிக்கை’ என்பதற்கான உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் பிரிவு 35-ன் படி அரசு நினைத்தால் எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அ...

கடன் வழங்கும் நிறுவனங்கள்

Image
*தமிழ்நாடு முத்தரையர்* *முன்னேற்ற சங்கம், விவசாய அணி..* கடன் வழங்கும் நிறுவனங்கள்: வேளாண் கடன் வழங்கும் இந்திய வங்கிகள்: வங்கிகளின் தேசியமயமாக்கல் என்பது, வேளாண்மையை பிரதானத் தொழிலாகக் கொண்ட பல்வேறு தொழில்கள் சார்ந்த பொருளாதார மண்டலங்களுக்கு கடன்வசதி செய்து தருவதற்கான சிறந்த நடவடிக்கையாகும். ஆற்றல் வாய்ந்த வளர்ந்துவரும் வேளாண் துறைக்கு, அதன் எல்லாவித வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதற்கு வங்கிகள் மூலம் போதுமான நிதி தேவைப்படுகிறது. 05 லிருந்து தொடங்கும் மூன்று வருடங்களுக்கு, வேளாண்துறைக்கான கடனை இரட்டிப்பாக்கும்படி இந்த வங்கிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது. பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில், அரசு விவசாயத்திற்கு அளித்துள்ள சிறப்பு கவனம் மற்றும் நிதி ஒதிக்கீடு, இவற்றுடன் வங்கிகளால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பயன்களைப் பெறுவது இப்போது விவசாயிகளின் கையில்தான் உள்ளது. பின்வருபவை, சில தேசியமமாக்கப்பட்ட வங்களின் கடன் வாய்ப்புகளின் பட்டியலாகும். ஆந்திரா வங்கி(www.andhrabank.in) ------------------------------------------------------------------ *ஆந்திர வங்கியின் கிசான் பச்சை அட்டை *...

அரசின் முக்கிய கடமைகள்

Image
#தமிழ்நாடு #முத்தரையர் #முன்னேற்ற #சங்கம் அரசின் முக்கிய கடமைகள்: முன்னுரை; மக்களுடைய நலன்களைக் கருதி, அவர்களுடைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துவதையும் தனது தலையாய கடமையாக நவீன கால அரசு கொண்டுள்ளது. அது அவ்வாறான கட்டுப்பாடுகளையும், ஒழுங்கு படுத்துதலையும் நடைமுறைப்படுத்த, பலவிதமான சட்டங்களையும் இயற்றுகிறது. மக்கள் தங்களுடைய ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் வண்ணம், அவர்களுக்கு வாய்ப்புகள் கிட்டும் வண்ணம் அவர்களுக்கு உரிய சுதந்திரத்தையும் அரசு உறுதி செய்கிறது. சமத்துவம் என்பது சுதந்திரம் மற்றும் நீதியோடு இயைந்தது. தனி நபர் ஒருவருக்கு ஆள்பவரால் அளிக்கப்பட்ட சட்டபூர்வமான எதிர்பார்ப்புகளையும் அதன் மூலம் அவர்களடையும் பலன்களையும் பெறும் முகத்தான் நீதி செயல்படுகிறது. அத்தனிநபருக்கு அளிக்கப்பட்ட உறுதிப்பாடுகளை நிறைவேற்றாமல் போனாலோ, அவருடைய உரிமைகள் பாதிக்கப்பட்டாலோ, அவ்வினங்களில் நீதி தலையிடுகிறது. சட்டத்தின் பொருள்: பொதுவாக புரிந்துகொள்ளப்பட்ட அளவில், சட்டம் என்பது, நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்தும் விதிமுறைகள் அடங்கிய தொகுப்பு என பொருள்படும். இவை மட்டுமின்றி, ...

இந்திய தண்டனை சட்டம்

Image
இந்திய தண்டனைச் சட்டம்-1860 இந்திய தண்டனைச் சட்டம்(Indian Penal Code) குற்றவியல் சட்டத்தின் அனைத்து பிரத்தியேக அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. இது 1860 ல் வரையப்பட்டு 1862 ல் பிரித்தானிய ஆட்சியின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு லார்ட் மெக்காலேய் தலைமையில் இயங்கிய முதல் சட்ட ஆணையத்தால் தயாராக்கப்பட்டது. இது இங்கிலாந்து சட்டத்திலிருந்து அவ்வூரின் தனித்தன்மையைகளை விடுத்த பின் வந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டது. பிரெஞ்சு தண்டனைச் சட்டம் மற்றும் லூசியானாவின் லிவிங்ஸ்டன் சட்டத்திலிருந்து ஆலோசனைகள் எடுக்கப்பட்டு இது வரையப்பட்டது இந்திய தண்டனைச் சட்டம் 1837 ஆம் ஆண்டு சபையில் இந்திய கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது இந்திய சட்டவரையறை புத்தகதில் இடம் பெற 1860ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது.இது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களில் சிறந்ததாக கருதப்பட்டது .இது முக்கிய திருத்தங்கள் இல்லாம...

சுயதொழில் தொடங்குவது எப்படி..??

Image
சுயதொழில் தொடங்குவது எப்படி..?? சுயதொழில்; தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின்பு பணத்தினைத் தேடுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது  தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். அந்தத் தேவைக்கேற்ப தொழில் கண்டுபிடிப்பது பற்றி சிறிய உண்மை சம்பவம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சிறந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடுமுறைக்கு தன் பாட்டி ஊரான காரைக்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனிமையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும் மறைந்தது. ஏன்? அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாழாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி? தன் பாட்டி வீட்டிலிருந்த பசுமாட்டிலிருந்து 2 கிராம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் எலக்...