Posts

Showing posts from November, 2020

அரசின் முக்கிய கடமைகள்

Image
#தமிழ்நாடு #முத்தரையர் #முன்னேற்ற #சங்கம் அரசின் முக்கிய கடமைகள்: முன்னுரை; மக்களுடைய நலன்களைக் கருதி, அவர்களுடைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துவதையும் தனது தலையாய கடமையாக நவீன கால அரசு கொண்டுள்ளது. அது அவ்வாறான கட்டுப்பாடுகளையும், ஒழுங்கு படுத்துதலையும் நடைமுறைப்படுத்த, பலவிதமான சட்டங்களையும் இயற்றுகிறது. மக்கள் தங்களுடைய ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் வண்ணம், அவர்களுக்கு வாய்ப்புகள் கிட்டும் வண்ணம் அவர்களுக்கு உரிய சுதந்திரத்தையும் அரசு உறுதி செய்கிறது. சமத்துவம் என்பது சுதந்திரம் மற்றும் நீதியோடு இயைந்தது. தனி நபர் ஒருவருக்கு ஆள்பவரால் அளிக்கப்பட்ட சட்டபூர்வமான எதிர்பார்ப்புகளையும் அதன் மூலம் அவர்களடையும் பலன்களையும் பெறும் முகத்தான் நீதி செயல்படுகிறது. அத்தனிநபருக்கு அளிக்கப்பட்ட உறுதிப்பாடுகளை நிறைவேற்றாமல் போனாலோ, அவருடைய உரிமைகள் பாதிக்கப்பட்டாலோ, அவ்வினங்களில் நீதி தலையிடுகிறது. சட்டத்தின் பொருள்: பொதுவாக புரிந்துகொள்ளப்பட்ட அளவில், சட்டம் என்பது, நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்தும் விதிமுறைகள் அடங்கிய தொகுப்பு என பொருள்படும். இவை மட்டுமின்றி, ...

இந்திய தண்டனை சட்டம்

Image
இந்திய தண்டனைச் சட்டம்-1860 இந்திய தண்டனைச் சட்டம்(Indian Penal Code) குற்றவியல் சட்டத்தின் அனைத்து பிரத்தியேக அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. இது 1860 ல் வரையப்பட்டு 1862 ல் பிரித்தானிய ஆட்சியின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு லார்ட் மெக்காலேய் தலைமையில் இயங்கிய முதல் சட்ட ஆணையத்தால் தயாராக்கப்பட்டது. இது இங்கிலாந்து சட்டத்திலிருந்து அவ்வூரின் தனித்தன்மையைகளை விடுத்த பின் வந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டது. பிரெஞ்சு தண்டனைச் சட்டம் மற்றும் லூசியானாவின் லிவிங்ஸ்டன் சட்டத்திலிருந்து ஆலோசனைகள் எடுக்கப்பட்டு இது வரையப்பட்டது இந்திய தண்டனைச் சட்டம் 1837 ஆம் ஆண்டு சபையில் இந்திய கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது இந்திய சட்டவரையறை புத்தகதில் இடம் பெற 1860ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது.இது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களில் சிறந்ததாக கருதப்பட்டது .இது முக்கிய திருத்தங்கள் இல்லாம...

சுயதொழில் தொடங்குவது எப்படி..??

Image
சுயதொழில் தொடங்குவது எப்படி..?? சுயதொழில்; தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின்பு பணத்தினைத் தேடுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது  தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். அந்தத் தேவைக்கேற்ப தொழில் கண்டுபிடிப்பது பற்றி சிறிய உண்மை சம்பவம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சிறந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடுமுறைக்கு தன் பாட்டி ஊரான காரைக்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனிமையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும் மறைந்தது. ஏன்? அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாழாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி? தன் பாட்டி வீட்டிலிருந்த பசுமாட்டிலிருந்து 2 கிராம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் எலக்...