Posts

Showing posts from August, 2020

சட்டரீதியான கைதுகளும், சட்டவிரோத கைதுகளும்

Image
சட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும் கைது நடைமுறைகள் இந்தியாவின் குற்றவியல் நீதிமன்றங்களும், காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகளும் அவற்றிற்கு விதிக்கப்பட்ட சட்ட நெறிமுறைகளின்படியே செயல்பட வேண்டும் என்றாலும், பலநேரங்களில் சட்டத்தின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு சட்டத்திற்கு முரணாக செயல்படுவதில் காவல்துறையும், அரசு வழக்கறிஞர்களும் முனைப்பு காட்டுகின்றனர். எந்த ஒரு கைது சம்பவமும் பல்வேறு சட்ட அம்சங்களின் நிபந்தனைக்கு உட்பட்டே செய்யப்படவேண்டும். இவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு நடைபெறும் கைது சம்பவங்களைவிட சட்ட அம்சங்களை புறந்தள்ளி தனிமனித விருப்பு – வெறுப்புகளால் உருவாகும் சட்ட விரோத கைது சம்பவங்களே இந்தியாவில் அதிகம். சட்ட ரீதியான கைதுகளை உரிய முறையில் கண்காணிக்க வேண்டியதும், சட்ட விரோத கைதுகள் குறித்து தெரிய வரும்போது அதுகுறித்து உறுதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு குற்றவியல் நீதிமன்றங்களிடமே உள்ளது. ஆனால் பணிச்சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குற்றவியல் நீதிமன்றங்கள் இதுபோன்ற அம்சங்களை பரிசீலிப்பதே இல்லை. சட்டவிரோத கைதுகளால் பாதிக்கப்படும் நபர்களில் வ...

குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவுகள்

Image
  குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவுகள் 1) குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பும் அவற்றின் அதிகாரங்களும் பற்றி (constitution of criminal courts and their powers) குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 6-35 ] கூறுகிறது. 2) நபர்களை கைதுசெய்தல் (arrest of persons) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 41-60 ] கூறுகிறது. 3) ஆஜராவதை கட்டாயப்படுத்தும் நீதிமுறை கட்டளைகள் (process to compel appearance) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 61-69 ] கூறுகிறது. 4) கைது செய்வதற்கான பிடியாணை (warrant of arrest) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 70-81 ] கூறுகிறது. 5) பகிரங்க அறிவிப்பு மற்றும் ஜப்தி (proclamation and attachment) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 82-86 ] கூறுகிறது. 6) பொருட்களை தாக்கல் செய்வதற்கான அழைப்பாணை (summons to produce) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 91-92 ] கூறுகிறது. 7) பொருட்களை தாக்கல் செய்வதற்கான சோதனை பிடியாணை (search warrant) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 93-101 ] கூறுகிறது. 8) அமைதியை காப்பதற்கும் நன்னடத்தைக்குமான பிணையம் (security for kee...

சட்டம் தெளிவோம்..20

Image
  தற்காப்பு சட்டம்... இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்: 96,97, 98 ஆகியவைகள்,உங்களின் / வேறு எவருடையது உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் எந்த ஒரு செயலிலிருந்தும் தற்காத்துக்கொள்ள‌  செய்யப்படும் எந்த ஒரு செயலும் குற்றமல்ல. அதே போல உடமைகளை பாதுகாத்துக்கொள்வதற்கும் இந்த தற்காப்புரிமை செல்லும். இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்: 99 மேற்படி தற்காப்பு உரிமை என்பது ஒரு பொது ஊழியரால் செய்யப்படும் போது தற்காப்புரிமை அளிக்கப்படவில்லை என கூறுகின்றது. ஆனால் அவர் நல்லெண்ணத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும் என்கின்றது சட்ட பிரிவு. சில நாட்களுக்கு முன் தற்காப்புரிமை சட்ட விதி 96, 97 னை பொது ஊழியர்களுக்கு எதிராக உபயோகப்படுத்த சட்ட பிரிவு 99 தடையாக உள்ளது என சொல்லியுள்ளேன். ஆனால், சட்ட பிரிவு 99 னை சற்று ஆழ்ந்து நோக்கும் போது, அவ்வாறு செயல்படும் பொது ஊழியர் நல்லெண்ணத்துடன் செயல்படும் என்ற ஒரு வார்த்தை உபயோகிக்கப்பட்டுள்ள்ளதை கவனித்தேன்.  உரிய எச்சரிக்கையும், கவனத்துடன் செயல்படுதலையே நல்லெண்ணம் என கொள்ள இயலும் என‌,  இந்திய தண்டனை சட்ட பிரிவு 52 ன் கீழ் சொல்லப்பட்டுள்ளதால், பொது ஊழியர் சட்டத்திற...

சட்டம் தெளிவோம்..19

Image
  அவதூறு வழக்கு மானநஷ்ட வழக்கு DEFAMATION நம் நாட்டில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழி செய்யப்பட்டுள்ளது.  எந்த முகாந்திரமும் இல்லாமல், தகுந்த காரணமோ, ஆதாரமோ இல்லாமல், ஒரு தனிநபர் பற்றி வாய்மொழியாகவோ, பிறர் படிக்கக்கூடிய வகையிலோ, செய்கை  மொழியின் மூலமாகவோ, நாம் செய்யும் செயல் மற்றவரின் பார்வையில் படக்கூடிய வகையிலோ, தவறான செய்திகளையோ, அவதூறான விஷயங்களை பரப்புவதோ, வெளியிடுவதோ - இவ்வாறாக பரப்பக்கூடிய அவதூறு அந்த நபரின் பெயருக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய ஒரு செயலாக  இருப்பின் - சமுதாயத்தில் அவர் மானம் பறிபோகக் கூடிய நிலை இருக்கும் என்று தெரிந்தே செய்யும் செயல்  - இந்திய தண்டனைச் சட்டத்தின்  பிரிவு 499ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம்.     பொதுவாக இவ்வாறு அடுத்தவரின் மானம் பறிபோகக்கூடிய செயல்களைச் செய்யும் நபர்களின் மீது மானநஷ்ட வழக்கு தொடரும் நிலையில்,  எதிர்  தரப்பு ‘பொதுநலம் கருதியே உண்மையை வெளியிட்டோம்’ என்றோ, அரசுப் பணியாளர் (Public Servant)  அவர் செய்யும் பணியில்  அவருடைய நிலையை வ...

சட்டம் தெளிவோம்..18

Image
இந்திய தண்டனை சட்டம் இந்திய தண்டனைச் சட்டம்-1860 இந்திய தண்டனைச் சட்டம்(Indian Penal Code) குற்றவியல் சட்டத்தின் அனைத்து பிரத்தியேக அம்சங்களையும் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டது. இது 1860 ல் வரையப்பட்டு 1862 ல் பிரித்தானிய ஆட்சியின் போது காலனித்துவ இந்தியாவில் அமலுக்கு வந்தது. இது பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள்ளே கொண்டு விரிவடைந்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் வரைவு லார்ட் மெக்காலேய் தலைமையில் இயங்கிய முதல் சட்ட ஆணையத்தால் தயாராக்கப்பட்டது. இது இங்கிலாந்து சட்டத்திலிருந்து அவ்வூரின் தனித்தன்மையைகளை விடுத்த பின் வந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டது. பிரெஞ்சு தண்டனைச் சட்டம் மற்றும் லூசியானாவின் லிவிங்ஸ்டன் சட்டத்திலிருந்து ஆலோசனைகள் எடுக்கப்பட்டு இது வரையப்பட்டது இந்திய தண்டனைச் சட்டம் 1837 ஆம் ஆண்டு சபையில் இந்திய கவர்னர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது இந்திய சட்டவரையறை புத்தகதில் இடம் பெற 1860ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டி இருந்தது.இது அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சட்டங்களில் சிறந்ததாக கருதப்பட்டது .இது முக்கிய திருத்தங்க...

சட்டம் தெளிவோம்..17

Image
சட்டம் தெளிவோம்... ஐபிசி 100 சட்டம் பற்றி தெரியுமா? தற்காப்புக்காக பெண்கள் கொலை செய்யலாம்! பெண்களின் மீதான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த குற்றங்களுக்கான சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஐபிசி 100 சட்டம் குறித்து தற்போது காண்போம்… பெண் மேன்மையானவள், பெண் உருவாக்குபவள், பெண் தீர்மானிப்பவள் என்றெல்லாம், மகளிர் தினத்தன்று வாழ்த்துகளை பலர் தெரிவித்தனர். ஆனால் இன்றும் பெண்களுக்கான உரிமைகள், சுயமரியாதைகள் கொடுக்கப்படுகிறதா என்றால், அது கேள்விக்குறியாக தான் உள்ளது. இவ்வாறு பெண்களுக்கு பல்வேறு முறைகளில் அநீதி இழைக்கப்பட்டு வருவது என்பது வேதனை. இதுகுறித்து ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்டோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும், பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதற்கு பொள்ளாச்சியில் நடைபெற்ற கொடூர சம்பவமே சாட்சி. இந்த மாதிரியான குற்றங்களுக்கு அறிவுரை மட்டுமே கூறி வரும் நாம், அதற்கான சட்டங்கள் குறித்து ஆராய்ந்தது இல்லை என்று சொல்லலாம். தற்போது, தற்காப்பு தொடர்பான சட்டங்கள் பற்றி அறிந்...

சட்டம் தெளிவோம்..16

Image
  சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பிரிவு 114A –  கொடுமையான பாலியல் வன்முறை அல்லது பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண், தான் அந்த பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளும். பிரிவு 119 -  ஒரு வழக்கின் சாட்சி பேச முடியாதவராயிருப்பின் அவர் நீதிமன்றத்தின் முன் எழுத்து மூலமாகவோ, சைகை மூலமாகவோ  மற்றவருக்குப் புரியும் வண்ணம் கொடுக்கும் சாட்சியம் வாய்மொழி சாட்சியத்துக்கு ஒப்பாக ஏற்றுக் கொள்ளப்படும்.  கேள்வி: சாதாரண வழக்குகளில் புகாரைப் பெற காவல் துறையினர் மறுக்கலாமா? பதில்: எவ்வகையான புகாரையும் காவல்துறையினர் பெற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது.  புகாரைப் பெற்று அதனை சமூக பதிவேட்டில் பதிவு செய்து அதன் நகலை புகார்தாரருக்குத் தரவேண்டும். பின் புலனாய்வில் குற்றம் நிகழ்ந்ததாக தெரியவந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யலாம் இல்லை எனில் வழக்கை முடித்துவிடலாம். கேள்வி: கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளை - நிஜத்தில் காவல் துறை செய்கிறதா? அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ? பதில்: ...

சட்டம் தெளிவோம்..15

Image
அரசு அலுவலகங்களில் புகார்/மனுவை கையளித்ததிற்கான ஒப்புதல் சான்று ஒவ்வொரு மனு / புகாரினை அரசு அலுவலகத்தில் வழங்கும்போது, அதற்குரிய ஒப்புதல் சான்று வழங்கும் நடைமுறையினை பெரும்பாலான அரசு அலுவலகங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. அவ்வாறு நாம் வழங்கிய ஆதாரங்களுடன் கூடிய புகார் மற்றும்  மனுக்களுக்கு அரசாணை எண் 99 & 114 ன் படி ஒப்புதல் ரசீது பெறவில்லையெனில் அல்லது அவர் வழங்க மறுத்தாரெனில், சம்பந்தப்பட்ட அரசு அலுவலக அதிகாரி அந்த புகாரின் / மனுக்களின் மீதோ நடவடிக்கை எடுத்து தீர்வு காணாதிருக்கும் பட்சத்தில் அந்த அதிகாரி மீது சட்ட நடவடிக்கை அல்லது மேலதிகாரியிடம் அந்த கீழ்நிலை அதிகாரி குறித்து ஆதாரத்துடன் புகார் அளிக்க வழிவகை இல்லாமல் போயிவிடும். மேலும் இதுகுறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார் / மனு குறித்த நிலை பற்றிய கேள்வி கேட்க எழாத சூழல் உருவாகக்கூடும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க... 1) ஒவ்வொரு புகாரின் / மனுக்களில் இறுதி பக்கத்தில் கீழ்கண்ட வார்த்தைகளை இணைத்து அந்த புகார்/மனுக்களை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் ........................................... ................

சட்டம் தெளிவோம்..14

Image
சைபர் குற்றங்கள்... தொழில்நுட்பம் வளரவளர பிரச்னைகளும் கூடவே சேர்ந்து வளருகிறது. முன்பெல்லாம் காவல் நிலையங்​களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இப்போது, சைபர் க்ரைம் பிரிவு களில்தான் கூட்டம் நெட்டித்தள்ளுகிறது. செல்போனில் மிரட்டல், ஆபாச  எஸ்.எம்.எஸ்., நைஜீரியர்களின் மோசடியில் சிக்கி ஏமாறுகிறவர்கள் என்று இங்கே படை யெடுப்பவர்கள் ஏராளம். இதில் சிக்கிக்கொள் பவர்களும் ஏராளம். விடுபட முடியாமல் தவிர்ப்பவர்களும் ஏராளம். ! இந்தியாவில் இணையதளம் தொடர்பான குற்றங்களால் நடப்பாண்டில் 24,630 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது. சைமன்டெக் நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2013 ஆண்டு ஜூலை வரை ஆய்வு நடைபெற்றது. 1000 இந்தியர்கள் உள்ளிட்ட 24 நாடுகளைச் சேர்ந்த 13000 இளைஞர்கள் இதில் பங்கேற்றனர்.மொபைல்போன் மூலமான திருட்டு 58 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இ.மெயில் ஐடி, பாஸ்வேர்ட் போன்றவைகளை ஹேக் செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது.நாடும் நகரமும் டிஜிட்டல் வயப்படுவதைத் தொடர்ந்து அனுபவிக்கும் அவஸ்தைகளைப் பற்றித்தான் இந்த சிறப்புக் கட்டுரை இணையம் ஒரு ...

சட்டம் தெளிவோம்...13

Image
சட்டம் தெளிவோம்..13 பொதுநல வழக்கு போடுவது எப்படி.. வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ? பொது நல வழக்கு போடுவது எப்படி ? பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம். ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு, உயர்நீதிமன்றம். இப்போது, கீழ் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போடுவது எப்படி என்று பார்க்கலாம். பொதுவாக சார்பு நீதிமன்றத்திலேயே, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பத்து நபர்கள் இணைந்து வழக்கு போடுவது நல்லது. இதற்கு முதலில், லீவ் மனு போட வேண்டும்.     இது, வழக்குடன் இணைந்தது. முதலில் சிவில் வழக்கு போட, பிராது தயாரிக்க வேண்டும். முதலில், நீதிமன்றத்தின் பெயர், அதன் கீழ், ஊர், அதன் கீழ், முதலேற்பு வழக்கு எண் என போட்டு, இடம் விட்டு, எந்த வருடம் தாக்கல் செய்கிறோமோ, அந்த வருடத்தை போட வேண்டும். அதன் பின்பு, பத்து பேர் வழக்கு போடுவதாக இருந்தால் அவர்கள் பெயரை, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, வாதிகள் என்று காண்பியுங்கள். அதன் பின்பு, எதிரிடை என்று போட்டு, எதிர் பார்ட்டி நபர்கள் பெயரை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு...

சட்டம் தெளிவோம்..12

Image
புதிதாக ஓர் அறக்கட்டளையைத் (Trust) தொடங்குவதற்கு வேண்டிய அடிப்படையான விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அறக்கட்டளையைத் தொடங்குவது எப்படி? அதற்கு எங்கு பதிவுசெய்ய வேண்டும்? ஓர் அறக்கட்டளையில் எத்தனை அறங்காவலர்கள் இருக்கலாம்? யார் வேண்டுமானாலும் அறக்கட்டளை தொடங்கலாமா? பதில்: ------ ’’டிரஸ்ட் என்பதற்கு ’பொறுப்பணம்’ என்பதுதான் சட்டரீதியாக சரியான சொல். தர்ம நோக்கத்தில் செயல்படும் டிரஸ்ட்களுக்கு மட்டுமே அறக்கட்டளை என்று பெயர். ஆனால் தற்போது டிரஸ்ட் என்பது அறக்கட்டளை என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு வகையான டிரஸ்ட்டுகள் உள்ளன. ஒன்று தனியார் டிரஸ்ட் மற்றொன்று பொது டிரஸ்ட். தனியார் டிரஸ்ட்: ------------------ டிரஸ்ட் ஒன்றைத் தொடங்க வேண்டுமென்றால் வருமானம் வரக்கூடிய சொத்துக்கள் இருக்க வேண்டியது அவசியம். குடும்ப உறுப்பினர்கள், வாரிசுகள் ஆகியோர் அனுபவிக்கும் வகையில் ஓர் ஆவணம் அல்லது ஒர் உயில் மூலம் டிரஸ்ட் அமைக்கலாம். அதற்கு தனியார் டிரஸ்ட் என்று பெயர். தனிப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட குடும்பங்களின் வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக இத்தகைய தனியார் டிரஸ்ட்டுகள் ஏற்படுத்தப்ப...

சட்டம் தெளிவோம்..11

Image
சட்டம் தெளிவோம்..11 நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்த தம்பதிகளுக்கு இணையாகக் காதல் திருமணம் செய்த தம்பதிகளும் இப்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து வருகின்றனர். காதலின் போது காதலரின் நல்ல குணங்களே கண்களில் தெரிய, காதலில் கசிந்துருகிய மனங்கள் திருமணம் என்ற பந்தத்திற்குள் இணைய விரும்புகின்றன. காதலிக்கும் போது ஒரு நாளின் சில மணி நேரங்கள் மட்டுமே சேர்ந்திருக்கும் போது தெரியாத, பல விவ(கா)ரங்கள் திருமணத்திற்குப் பின் வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழ முற்படும் போது தெரிந்து விடுகிறது. திருமணத்திற்குப் பின் ஏற்படும் ஏமாற்றங்கள் கோபமாக மாறும் போது, அதற்கு சுற்றத்தில் உள்ளவர்கள் மேலும் எரிபொருள் ஊற்றி எரிய வைக்கும் போது, பாதிக்கப்பட்டுள்ளதாக உணருபவரின் பொருளீட்டும் திறன் மிக முக்கிய கிரியா ஊக்கியாக அமைந்து திருமண வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது. கணவனோ, மனைவியோ திருமண வாழ்விலிருந்து பிரிந்து செல்லும் நிலை ஏற்படும் போது, அப்பிரிவை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து மணவாழ்வை மீண்டும் தொடர சட்டம் வழிகாட்டுகிறது. மணவாழ்வுரிமை மீட்புச் சட்டம் (Restitution of Conjugal Rights) எனப்படும் இந்தச் சட்ட...

சட்டம் தெளிவோம்..10

Image
சட்டம் தெளிவோம்..10 சட்டத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் சாதாரண பொதுமக்களின் வாழ்வில் அன்றாடம் குறுக்கிடும் சட்டங்கள் கிரிமினல் சட்டம் என்று கூறப்படும் குற்றவியல் சட்டங்களும், சிவில் சட்டம் என்று கூறப்படும் உரிமையியல் சட்டங்களுமே! சிவில் சட்டப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான கால அவகாசம் ஓரளவுக்காவது வழங்கப்படுகிறது. ஆனால், குற்றவியல் சட்டப்பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குப் பெரும்பாலான நேரங்களில் கால அவகாசம் இருக்காது. இந்த சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்களைப் பற்றி நாம் சென்ற அத்தியாயங்களிலேயே பார்த்தோம். ஒரு குற்ற நிகழ்வில் நாம் பாதிக்கப்படலாம். அப்போது அந்த குற்ற நிகழ்வை ஏற்படுத்தியவர் மீது புகார் அளிப்பது எப்படி? அந்தப் புகாரை நிரூபிப்பது எப்படி? குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தருவது எப்படி? நமது இழப்பிற்கான இழப்பீட்டைப் பெறுவது எப்படி? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதேபோல ஒரு குற்ற நிகழ்வில் நாமும் உண்மையாகவோ, பொய்யாகவோ குற்றம் சாட்டப்படலாம். அவ்வாறு நம்மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது நமக்கான கடமைகள் என்ன? உரிமைகள்...