Posts

Showing posts from October, 2020

விவசாயங்களுக்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி..??

Image
விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி? விவசாய கடன்; இந்தியாவின் முதுகெழும்பு விவசாயத்தில் தான் இருக்கிறது என்பர். பல்வேறு வகையான தொழில்களுக்கு தேவைப்படுவது போலவே வேளாண்மை தொழிலுக்கும் மூலதனம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. விவாசயிகள் தங்கள் கடன் தேவைகளை பல வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றனர். முதன்முதலாக விவசாயிகளுக்கு வங்கி கடன் என்பது கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள் மூலம் தான் சாகுபடி செலவுகளுக்கு பணமும், இடு பொருள்கள் உரம் பூச்சி மருந்து முதலியவை வழங்கப்பட்டது. நீண்ட கால கடன் கூட்டுறவு நிலவள வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது. விவசாயிகள் தனியாரிடமும், கமிஷன் மண்டி, கந்து வட்டிக்காரர்களிடமும், உரக்கடைக்காரர்களிடமும் கடன் பெற்று சாகுபடி செய்வதுண்டு. ஆனால் வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்ட பின்பு கிராமங்கள் பலவற்றில் வங்கி கிளைகள் திறக்கப்பட்டன. அங்கு கிராம மேம்பாட்டிற்கும், குறிப்பாக வேளாண்மைக்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன. வங்கிகளில் தனியார் வங்கிகள், கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு நிலவள வங்கிகள், கிராமிய வளர்ச்சி வங்கிகள், பொதுத்துறை வங்கிகள், வெளிநாட்டு ...

பட்டா 8_வகை - சட்டம் தெளிவோம்..!!

Image
பட்டாக்கள் 8 வகை - சட்டம் தெளிவோம். ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும். ஒன்று பத்திரம்  -  இன்னொன்று பட்டா. பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம். இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்! பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும். கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும். அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!! 1. யு.டி.ஆர் பட்டா: மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து (வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்ற...

பட்டா மாறுதல் செய்வது எப்படி?

Image
பட்டா மாறுதல் செய்வது எப்படி? சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துவிடுவதுடன்  பட்டா மாற்றம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்து எந்த தாலுகா எல்லைக்கு உட்பட்டது என்பதை அறிந்து, அந்த பகுதி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்திலும் பட்டா மாற்றம் செய்வதற்கு விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. அதனை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார் அல்லது கணவர் பெயர், இருப்பிட முகவரி போன்ற விவரங்களை தெளிவாக எழுத வேண்டும். அத்துடன் பட்டா மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரங்களை கவனமாக நிரப்ப வேண்டும். அந்த விவரங்களை பிழை இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். அதில் சர்வே எண் போன்ற இலக்கங்களை தவறு இல்லாமல் எழுத வேண்டும். சொத்துக்குரிய சர்வே எண் உள்ளடக்கிய இடம் முழுவதும் வாங்கப்பட்டு இருக்கிறதா? சொத்தின் ஒரு பகுதி மட்டும் வாங்கப்பட்டு இருக்கிறதா? என்பதை குறிப்பிட்டு அது தொடர்பான சர்வே எண்ணை குறிப்பிட வேண்டும். ஒரு பகுதியை மட்டும் வாங்குவதாக இருந்தால் உட்பிரிவு சர...

VAO கிராம நிர்வாக அதிகாரியின் பணிகள் என்ன..??

Image
கிராம நிர்வாக அலுவலரின் பணிகள் மற்றும் கடமைகள் கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல். நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல். சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல். பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல். பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல். தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல். கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல். காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல். இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல். கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்...

DNT என்றால் என்ன..??

Image
DNT என்றால் என்ன..?? DNT தேவை ஏன்..?? சலுகைக்காகவா DNT..?? உரிமைக்காகவா DNT..?? 1.சீர்மரபினர் நலச்சங்கம் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவருவது எதற்காக? சமூகநீதி பேசுகின்ற தமிழகத்தில் சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு அன்னிய அரசு வழங்கிய உரிமைகளும் சலுகைகளும் கூட பறிக்கப்பட்டு விட்டன. எனவே அவர்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும், சீர்மரபினர் மக்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தீவிரமான போரட்டங்களை நடத்தி வருகிறது  2, எந்தெந்த சாதி சீர்மரபினர் வகுப்பில் வருகின்றனர்? தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் 68 சாதியினர் உள்ளனர். அதில் பிரமலைக்கள்ளர், கூத்தப்பர் கள்ளர், பெரியசூரி கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர் என்ற நான்கு(4) கள்ளர்களும், மறவர், ஆப்பநாடு கொண்டயன் கோட்டை மறவர், செம்ப நாட்டு மறவர், மறவர் என்ற மூன்று(3) மறவர்களும், வலையர், செட்டிநாடு வலையர், வேட்டுவ கவுண்டர், ஊராளி கவுண்டர், சேர்வை, அம்பலகாரர், அம்பலக்காரர், வேட்டைக்காரன் என்ற எட்டு(8) முத்தரையர்களும், ...

சாதி சான்றிதழ் வருமான சான்றிதழ்

Image
சாதிசான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் பொருளாதார மற்றும் சமூக  நிலைகளில் பின்தங்கி  இருப்பவர்களை முன்னேற்றும் விதமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தருவது உள்ளிட்ட சில சலுகைகளை அரசு அளித்துள்ளது. இவற்றைப் பெறுவதற்கு சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் அவசியமாகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவை பெரும்பாலும் தேவைப்படும். எனவே இந்தச் சான்றிதழ்களை எவ்வாறு பெறுவது, இந்தச் சான்றிதழ்களின் பயன்பாடு என்ன? என்பது பற்றி தெரிந்துகொள்வோம். சாதிச் சான்றிதழ்: தமிழக அரசு தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ். சாதிச் சான்றிதழ் பெரும்பாலும் மாணவர்களுக்கும், அரசுப் பணியில் சேர்பவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் தேவைப்படுகிறது. இச்சான்றிதழ் ஒரு தற்காலிகச் சான்றிதழே. ஏனெனில் எவரும் சாதியை மாற்றமுடியாது. ஆனால் வகுப்பு மாறலாம். அதாவது ஒருவர் ஒருவர் பிற்பட்ட வகுப்பில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர், தனது மதத்தை மா...

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

Image
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமென்பது நுகர்வோர் பிரச்சனைகள், சேவை குறைபாடு, வணிக நடைமுறை, நேர்மையற்ற வணிகமுறை போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் புகார்தாரரே புகார் தாக்கல் செய்தும் அவரே வாதிட்டும் நீதிபெற முடியும். மருத்துவக்குறைபாடுகள், வங்கிகள், வீடு கட்டிக் கொடுப்பவர் பிரச்சனைகள் மற்றும் பொருள்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய சிக்கல்களுக்கு நீதி பெற நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். முக்கிய விதிகள்; நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”2(7)” நுகர்வோர் மன்றங்கள் எல்லாம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இல் பிரிவு 27(2) –இன்படி முதல் நிலைக் குற்றவியல் நீதிமன்றமாக (FIRST CLASS MAGISTRATE COURT) செயல்படவும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும் அல்லது அதிகபட்சம் ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம்) அபராதம் விதிக்கவும் அதிகாரம் உள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் பிரிவு ”3” அடுக்கு நீதி வழங்கும் நுகர்வோர் மன்ற அமைப்புகள் (Three – Tier Consumer Disputes Redressal Agencies) பண வகையிலான ...

சாமானியர்களுக்காக உருவான இலவச சட்ட உதவி மையங்கள்

Image
சாமானியர்களுக்காக உருவான இலவச சட்ட உதவி மையங்கள் பிறக்கும்போது மனிதர்கள் எவரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சில சூழ்நிலைகளின் காரணமாகத்தான் மனிதர்கள் பெரும்பாலும் குற்றவாளியாகிறார்கள். அதனால்தான் சிறைச் சாலைகளில் “குற்றத்தை வெறு, குற்றவாளிகளை வெறுக்காதே” என்ற வாசகம் இருக்கும். ‘சட்டம் ஒரு இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம் விளக்கு’ என்றார் அறிஞர் அண்ணா. இப்போது அதிகமாக மனிதப் பேராசைகளாலும் ஆத்திரத்தாலும் வக்கிர எண்ணங்களாலும் குற்றங்கள் நிகழ்கின்றன. நீதிமன்றப் படிகளில் ஏறும்போதுதான் தன் தவறை சிலர் உணர்கிறார்கள். வாய்தா, வாய்தா என்று ஆண்டுக் கணக்கில் நீளும் வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மெத்தப் படித்தவர்களுக்கே சட்டத்தின் நுணுக்கங்கள் முழுதும் தெரியாது. நிறைய பணம் செலவழித்து வழக்கறிஞர் மூலம் தங்கள் வழக்கை நடத்துகிறார்கள். இதில் கிராமங்களில் வசிக்கும் மக்கள் அடிப்படை சட்ட உரிமைகளை அறியாமல் உள்ளனர். வழக்கு என்று வந்த பிறகு யாரை நாடுவது எப்படி வழக்கை கொண்டு செல்வது என்று திக்குத் தெரியாமல் இருப்பார்கள். கல்லாமை, கற்றறிந்த ஒரு சிலரும் சட்ட விழிப்புணர்வு இல்லாமை...

அரசியல் என்றால் என்ன..??

Image
அரசியல் என்றால் என்ன? அரசியல் என்பது மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம் அல்லது கொள்கை. அரசியல் என்பது வாழும் முறை (Way of life) அல்லது வாழ்க்கை முறை (Way of living) ஆகும். அரசியல் என்பது சமுதாய வாழ்க்கைக்கு அமைதியைத் தருவது. சமுதாயத்தில் பலர் கூடி வாழ்வதற்கும், பொருளியல் ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழிவகுக்கிறது. அறநெறிகளில் மனிதகுலம் ஒன்றி நின்று வாழ்வதை உறுதிப்படுத்தத்தான் அரசியல் தோன்றுகிறது, தொண்டு செய்கிறது. அரசியல் தத்துவங்கள் மனித உலக வரலாற்றின் நிகழ்வுகளிலிருந்து தோற்றம் பெறுகின்றன. சிறந்த அரசியல் நிலவும் நாட்டில் ஒழுங்குகள் நிலவும். வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் எளிதில் கிடைக்கும். அறிவுத்துறை மேம்படும். பகை ஒடுங்கிப் பண்பாடு விளங்கும். அரசு /அரசாங்கம் அரசாங்கம் அரசின் ஒரு பகுதியும், அரசின் பொதுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதற்கும், பொது விவகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய கருவியுமாகும். அரசாங்கம், அரசின் நலன்களை மேம்படுத்துவதற்காகவும், காப்பதற்காகவும், அதன் பிராந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காகவும் அரசின் பெயரால் இயங்குகின்ற ஒரு முகவர...

உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

Image
உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வதைப் போன்ற சவாலான அம்சம்தான். ஏனெனில் ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் நிலவும் மிகக்குறைந்த மனிதவளம் உள்ளிட்ட வசதிக்குறைவுகளை யாரும் மறுக்க முடியாது. எனவே காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுவதும் உண்மைதான். காவல்துறைக்கான பல அத்தியாவசிய தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படுவதில்லை என்பதும் ஏற்கத்தகுந்த வாதம்தான். எனினும், இதற்காக சாமானிய மனிதனை, காவல்துறையினர் புறக்கணிப்பதையும் அங்கீகரிக்க முடியாது. நடைமுறையில் காவல்நிலையத்திற்கு வரும் எந்த ஒரு புகாரையும் விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கான காரணத்தை தேடுவதிலேயே ஒரு காவல்துறையின் அதிகாரியின் மூளை முதன்மையாக செயல்படுகிறது. சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களால் தரப்படும் ப...

ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail)

Image
ஜாமீன் (Bail) முன் ஜாமீன் (Anticipatory Bail) பிணை ஆணை அல்லது பிணைய ஆணை(bail) ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையாகும். குற்றஞ் சாட்டப்பட்டவர் நீதிமன்ற விசாரணைக்கு திரும்ப வருவார் என்றும் அவ்வாறில்லையெனில் அவரால் வைக்கப்படும் பிணையை இழப்பார். மேலும் பிணை மீறியவர்கள் என்ற குற்றமும் சேரும் என்பதும் கொண்ட புரிதலின் பேரிலேயே இவ்வாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு பிணை ஆணை பிறப்பிக்கப்படும் முன்னர் பிணையில் வெளியே வந்தால் அவரால் புலானாய்விற்கு எந்த பாதிப்பும் உண்டாகாது என்ற கருத்தும் ஆராயப்படும். குற்றஞ்சாட்டப்பட்டவர் திரும்பி வருவார் என்பதில் ஐயங்கள் இருப்பினும் பிணை மறுக்கப்படலாம். பொதுவாக குற்ற விசாரணை முடிந்த பின்னர், அனைத்து நீதிமன்ற வருகைகளும் முடிந்தபின்னர், குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டால் பிணை விடுவிக்கப்படும். சில வழக்குகளில் பிணைப்பணம் திரும்பக் கிடைக்காது. ஜாமீன் கொடுக்கக்கூடியவை (Bailable), ஜாமீன் கொடுக்க இயலாதவை (Non  bailable) குற்றங்கள் பொதுவாக ஜாமீ...

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் என்ன..??

Image
ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் உரிமைகள்: *நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். *பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டு *நபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு *24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும் *பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும் *சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. *கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்: *கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நே...

ஐபிசி 318

Image
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 318 (IPC Section 318 in Tamil) விளக்கம் ஒரு குழந்தை பிறப்பதற்குமுன் அல்லது பிறக்கும்பொழுது அல்லது பிறந்தபின் மரணமடைந்திருக்கலாம். அக்குழந்தையை இரகசியமாகப் புதைப்பதோ அல்லது வேறு எந்த வகையிலாவது அந்தக்குழந்தையின் சடலத்தை மறைத்து விடுவதோ குற்றமாகும். ஏனெனில், குழந்தையின் பிறப்பை மறைக்கவேண்டும் அல்லது மறைக்க முயற்சிசெய்ய வேண்டும் என்ற கருத்துடன், இந்தச்செயல் புரியப்படுகின்றது. இந்தக் குற்றத்திற்கு 2 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

ஐபிசி 317

Image
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 317 (IPC Section 317 in Tamil) விளக்கம் பன்னிரண்டு வயதுக்கு குறைவான குழந்தையை அதனுடைய தந்தை அல்லது அதனை காக்கும் பொறுப்புடையவர் யாரேனும், அந்த குழந்தையை நிராதரவாக விட்டுவிட வேண்டும் என்ற கருத்துடன் ஏதாவது ஓர் இடத்தில் தனியே விட்டுவிடுவது குற்றமாகும். இந்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

ஐபிசி 111

Image
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 111 (IPC Section 111 in Tamil) விளக்கம் ஒரு செயல் தூண்டிவிடப்பட்டு மற்றும் ஒரு வேறுபட்ட செயல் செய்யப்பட்டிருக்கும் போது, அதை அவர் நேரடியாகத் தூண்டிவிட்டதுபோலவே அதே முறையில் மற்றும் அதே அளவிற்கு, செய்யப்பட்ட அச்செயலுக்காக அத்தூண்டிவிட்டவர் தண்டனைக்குள்ளாவார். விலக்கு:-இருப்பினும் செய்யப்பட்ட செயலானது தூண்டுதலின் ஒரு சாத்தியமான விளைவாக மற்றும் தூண்டுதலின் தாக்கத்தின்கீழ் அல்லது எந்தச் சதி அத்தூண்டுதலை ஏற்படுத்துகிறதோ, அந்த சதியின் உதவியுடன் அல்லது தொடர்வில் புரியப்பட்டு இருக்க வேண்டும். எடுத்துக்காட்டுகள் (a )z என்பவரின் உணவிற்குள் விஷத்தை வைப்பதற்கு, ஒரு குழந்தையை A என்பவர் தூண்டுகிறார், மற்றும் அந்நோக்கத்திற்க்காக அக்குழந்தையிடம் விஷத்தை கொடுக்கிறார்.அக்குழந்தை, அத்தூண்டுதலின் விளைவால், z இன் உணவிற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த, Y என்பவரின் உணவிற்குள் அவ்விஷத்தைத் தவறுதலாக வைக்கிறான்.இங்கு, அக்குழந்தை A யினுடைய தூண்டுதலின் தாக்கத்தின்கீழ் செயல்பட்டிருந்தால் மற்றும் அச்செயல் தூண்டுதலின் ஒரு சாத்திய விளைவு சூழ்நிலையின்கீழ் செய்யப்பட்டிருந்தால், z யி...

ஐபிசி 309

Image
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 309 (IPC Section 309 in Tamil) விளக்கம் யாராவது தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சி செய்து, அதற்கென ஏதாவது ஒரு செயலைப் புரிந்திருந்தால், அந்த குற்றத்திற்காக ஓர் ஆண்டுக்கு உட்பட்ட வெறுங்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

ஐபிசி 308

Image
இந்திய தண்டனை சட்டம்  பிரிவு 308 (IPC Section 308) ஒருவன் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு காரியத்தைப் புரிகிறான். ஒருவருக்கு மரணத்தை உண்டாக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் அந்தக் காரியம் செய்யப்படுகின்றது. அந்தக் காரியத்தின் விளைவால் மரணம் சம்பவித்தால், குற்றம்புரிந்த நபருக்கு கொலைக்குற்றம் ஆகாத மரணத்தை விளைவிக்கும் குற்றம்சாரும் என்றால் மரணம் விளையாவிடினும், குற்றவாளிக்கு மரணத்தை விளைவிக்க முயற்ச செய்ததற்காக 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அந்தக் காரியத்தின் விளைவாக யாருக்காவது காயம் ஏற்பட்டால், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். உதாரணம்: ஒருவரை நோக்கி ஆத்திரத்தில் திடீரென்று கடுஞ்சினம் ஊட்டப்பட்ட நிலையில் மற்றொருவர் சுடுகிறார். அதனால் மரணம் நிகழ்ந்தால், சுட்டவர் மீது கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றம் சாட்டப்படும். ஆகவே, மரணம் நிகழாதபோது சுட்டவர் மீது, மரணத்தை விளைவிக்க முயற்சிசெய்த குற்றம்சாரும்.

கிராம ஊராட்சி தலைவரின் அதிகாரம் மற்றும் பணிகள்

Image
கிராம ஊராட்சி தலைவரின் அதிகாரம் மற்றும் பணிகள்; அதிகாரம்; கிராம ஊராட்சியை பொருத்தவரை காசோலை மூலம் ஊராட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்யும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே இருக்கிறது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்கள் கட்டாயமாக கிராம சபைக் கூட்டத்தை கூட்ட வேண்டும். அந்தக் கூட்டத்தில் முந்தைய 3 மாதங்களில் நடைபெற்ற வரவு-செலவு கணக்கை முன்வைக்க வேண்டும். மக்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு ஊராட்சி தலைவர் பதிலளிக்க வேண்டும். அப்போது, பல்வேறு திட்டங்களின் பயனாளிகளின் பட்டியலையும் தெரிவிக்க வேண்டும். பயனாளிகளை தேர்வு செய்ய கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டும்”  ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களிலும் ஆண்டிற்கு நான்கு முறை கூட்டப்படும் கிராம மக்களின் அவைக் கூட்டத்தில், கிராமங்களின் கல்வி, சமூக வளர்ச்சி, போக்குவரத்து, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள் குறித்தும், நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகள் குறித்த அறிக்கையையும் ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர் முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். கிராமசபைக் கூட்டமே கிராம மக்களின் கையி...

ஐபிசி 307

Image
  இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 (IPC Section 307 in Tamil) விளக்கம் ஒருவருக்கு மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தன் செயலால் அத்தகைய மரணம் சம்பவிக்கு என்ற தெளிவுடன் செயல் செய்யப்பட்டால், அது செய்யப்படும் சூழ்நிலையை அனுசரித்துக் கொலைக் குற்றம் செய்வதற்கான முயற்சி என்று முடிவாக்கப்படுகிறது. இதற்கு காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். அந்த குற்ற முயற்சியால் யாருக்காவது காயம் ஏற்பட்டால் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அல்லது இதற்குமுன் சொல்லப்பட்டதைப்போல சிறைக்காவல் தண்டனை விதிக்கப்படும். இந்த பிரிவின் கீழ் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் காவலில் இருக்கும் பொழுது குற்றம் புரிந்து, அதனால் யாருக்காவது காயம் நேரிட்டால் அந்த கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். உதாரணம்: ஒரு குழந்தையைக் கொல்ல வேண்டும் என்ற கருத்துடன் அதனை யாருமில்லாத ஓர் இடத்தில் போட்டுவிடுகின்றனர். அதனால் அந்தக் குழந்தை மரணம் அடையாவிட்டால், குழந்தையை அங்கே போட்டவன், இந்தப் பிரிவின் கீழ் குற்றவாளியாகிறான்.

ஐபிசி 306

Image
  இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306 (IPC Section 306 in Tamil) விளக்கம் யாராவது தற்கொலை செய்து கொண்டால் அப்படித் தற்கொலை செய்து கொல்வதற்கு உடந்தையாக இருந்தவருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறைக்காவலைத் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.

ஐபிசி 305

Image
  இந்திய தண்டனை சட்டம் பிரிவு 305 (IPC Section 305 in Tamil) விளக்கம் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர் அல்லது சித்த சுவாதீனம் இல்லாதவர் அல்லது புத்திக் கோளாறு உள்ள மயக்க நிலையில் இருப்பவர் அல்லது பிறவி முட்டாள்; அல்லது குடிபோதையில் உள்ளவர் ஆகியவர்களின் யாராவது தற்கொலை செய்து கொல்வதற்கு ஒருவர் உடந்தையாக இருப்பது குற்றமாகும். இந்தக் குற்றத்துக்காக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.

சட்டப்பிரிவு 304 சொல்வது என்ன..??

Image
  இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 (IPC Section 304) விளக்கம் கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிந்தவனுக்கு, அவன் அந்த குற்றத்தை, மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தன்னுடைய செயலால் மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவுடன் அந்தக் குற்றத்தைப் புரிந்திருந்தால், ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக் காவலைத் தண்டனையாக விதிப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும். மரணம் உண்டாக வேண்டும் என்ற கருத்து இல்லாமல் அல்லது மரணத்தை விளைவிக்கத் தக்க உடல் காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தின்றி அவன் செய்த காரியத்தால் மரணம் விளைந்திருந்தால் அவனுக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

சட்டப்பிரிவு 303 சொல்வது என்ன..??

Image
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 303 (IPC Section 303) விளக்கம் ஆயுள்தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் கைதி கொலைக்குற்றம் புரிந்தால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.